சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு செயல்பட்டு ரயில்வே துறையை மேம்படுத்த வேண்டும். பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். முக்கிய ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்து தரப்படும். தமிழகத்தில் 23 ரயில்வே மேம்பால பணிகள் முடிந்துள்ளன என கூறினார்.